Wednesday, December 31, 2014

எங்கே இறைவன்


இந்து செல்லான் மசூதிக்குள்ளே.
இஸ்லாமியன் புகான் தேவாலயத்தில்.
கிருத்துவன் காணான் கோவில்தனை.

கோவிலிலும் மசூதியிலும் தேவாலயத்திலும்
பூட்டி வைத்த கடவுளோ

இவர்கள் வீட்டின் முன் பிச்சை கேட்கும் பிச்சைக்காரனாய்
வீட்டுக் கொல்லையில் ஒளிந்திருக்கும் எலிக்குட்டியாய்
தோட்டத்தில் ஓங்கி நிற்கும் மாமரமாய்
நைவேத்தியத்தை மொய்க்கும் ஈ எறும்பாய்
குரானைக் குடையும் கரையானாய்
சிலுவை மீது வலை வீசும் சிலந்தியாய்
காலைக் கதிராய் மாலை மதியாய்
தூணிலும் துரும்பிலும்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகி
அமைதியாய் இருக்கிறானே.

In english - http://agnibarathi.blogspot.in/2014/12/where-is-god.html




No comments: