Sunday, October 07, 2012

இராவண மகாத்மியம்


நோக்கின் எத்துனை அழகிந்த இராவணன்
ஆர்க்கும் அலைகடல் சுழிலங்கையின் காவலன்

பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
தண்மேகமெனத் தான் கருத்த முகம் மீது
பொன்மகுடமது பகலவன் என பொழிதல் காண்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்

மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை மேல் உருண்டோடும்
மின் எனப் புன்னகை காண் நகைத்தால் பேரிடி கேள்
திண் எனத் தினவெடுத்த தோள்மலை ஈரிமயம் காண்

பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்
இரும்பெனும் நெஞ்சில் ஈராயிரம் எண்ணமாய் வண்ணமாய்
அருமைப் பொன் மகுடத்தால் அருநீர் பருகும் மேகத்திற்கு நீர் தரப்
பொருமிப் பொங்கி பின் விழுந்தெழும் பேரலை பார்

பச்சைப் பட்டுடை போர்த்திய இடை என்ன வளமோ
இச்சையோடு அசைந்தாடும் இளநெல்லைப் போலே
இச்சையோடிவன் கருமுகம் பொழியும் எழில் மழையருந்தி
இச்சையோடு அசைந்தாடும் இடை என்ன வளமோ

வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்
துள்ளியோடும் நதியாய் தாவி எங்கும் இடை தனிலே
அள்ளித் தெளித்த நெல்லாய் ஆழகுப் பட்டாடை தனை
வெள்ளி மின்னும் வாள் வெட்டுவதைக் காண்

உண்மையுரைப்போம் வெரூ*உம் மானிடன் அல்ல இவன்
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்
பண்டிதர் படிக்கும் புருஷசுக்தம் அதனின்று வந்த
மன்னுயிர் புரக்கும் மாலயன் இவன்

சொல்லும் இவ்வுலகில் சுடர் தரும் சூரியன் இவன்
புல்லும் பனிமலையும் ஒருங்கே போற்றும் புரவலனிவன்
வல்லுயிர் உலகே வடிவான இவன் எதிர் வெறும்
வில்லுடை வேடுவன் தான் இந்த இராமன்

* - Must be the elongated form of வல்லின று. But Google transliterate does not recognize it for some reason. பொறுத்தருள்க.

In English

No comments: